தேவகோட்டையில் வாலிபர் குத்திக் கொலை: காட்டுக்குள் பிணம் வீச்சு


தேவகோட்டை அடுத்த ரஸ்தா ரெயில் நிலையம் அருகே உள்ள காட்டு பகுதியில் நேற்று மாலை தேவகோட்டை வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கு உள்ள ஒரு முந்திரி தோட்டத்தின் நடுவே சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலில் 12 இடங்களில் கத்திக்குத்து இருந்தது.

இறந்து கிடந்த வாலிபர் வெள்ளை சட்டையும், நீலநிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்து உள்ளார். இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் கல்லல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கல்லல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்ட வாலிபர் பெயர் விவரம், கொலைக்கான காரணம் என்ன? கள்ளக்காதல் தகராறில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? என பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குற்றங்கள் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . 1 Comment »

அரசு பஸ் ஜப்தி


தேவகோட்டை : கல்லல் அருகே மேலமகாணத்தைச் சேர்ந்தவர் ராமசாமி. இவரது மனைவி கோப்பெருந்தேவி. சில வருடங்களுக்கு முன் தேவகோட்டை ரஸ்தா அருகே வரும் போது அரசு பஸ் மோதியதில் இறந்து போனார். ராமசாமியும் அவரது மகனும் இழப்பீடு கேட்டு தேவகோட்டை சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2009 ஜன. 12 ந்தேதி கோப்பெருந்தேவி குடும்பத்தினருக்கு ரூ. 2 லட்சத்து 83 ஆயிரத்து 500 இழப்பீடு வட்டியுடன் வழங்க உத்தரவிட்டார். உத்தரவிட்டப்படி வழங்கபடவில்லை. இழப்பீடுக்காக ஏற்கனவே ஒரு பஸ் ஜப்தி செய்யப்பட்டது. போக்குவரத்து கிளை அதிகாரிகளின் உறுதிமொழியை தொடர்ந்து பஸ் விடுவிக்கப்பட்டது. உறுதி மொழிப்படியும் இழப்பீடு வழங்காததால் இழப்பீடு வட்டியுடன் சேர்ந்து ரூ. 3 லட்சத்து 32 ஆயிரத்து 976 வழங்க உத்தரவிடக்கோரியும், இல்லையேல் அரசு பஸ்சை ஜப்தி செய்து வசூல் செய்து தரக்கோரி கோர்ட்டில் மீண்டும் மனு செய்தனர்.மனுவை விசாரித்த நீதிபதி தனியரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.